தெல்லிப்பழை
தெல்லிப்பழை[1] அல்லது தெல்லிப்பளை (Tellippalai) இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் கட்டுவன், ஏழாலை ஆகிய ஊர்களும், தெற்கில் மல்லாகம் ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவியவருமான சா. ஜே. வே. செல்வநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் நீண்ட காலம் இருந்தவர்.
தெல்லிப்பழை Tellippalai ථෙල්ලිප්පල | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம், இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாண மாவட்டம் |
பிரதேச செயலாளர் பிரிவு | வலிகாமம் வடக்கு |
யாழ் மாவட்டத்தில் தற்காலத்தில் புகழ் பெற்று விளங்கும் துர்க்கை அம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- தெல்லிப்பழை பெயர்க் காரணம், தமிழ்நெட் - (ஆங்கில மொழியில்)