தும்பை
தும்பை (Momordica dioica) எனப்படுவது இந்தியாவிலும் இலங்கையிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகிரி வட்டத்திற்குட்பட்ட ஆத்துவழி மலைபிரதேசங்களிலும் காணப்படுகிறது. [1] இக்காய்களை தமிழகத்தில் பழுப்பக்காய், அல்லது பழுவக்காய் என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். இக்காய் நீரிழிவு நோய் நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
தும்பை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Cucurbitales |
குடும்பம்: | Cucurbitaceae |
பேரினம்: | Momordica |
இனம்: | M. dioica |
இருசொற் பெயரீடு | |
Momordica dioica ரொக்சுபர்கு. முந்தைய Willd. | |
வேறு மொழி பெயர்கள்
- அசாமிய மொழி : பாத் கெரெல
- வங்காளி : 'பாத் கொரொல, கீ கொரொல, கன்கரொல்
- தெலுங்கு : பொடா கக்காரா
- ஆந்திராவின் கிழக்குக் கரையோரம் பகுதிகளில் : ஆக்கக்கராக் காயா
- சிங்களத்தில் : தும்ப
மேலும் பார்க்க
வெளித் தொடுப்புகள்
- ITIS அறிக்கை
- படம்
- Phyto-pharmacology of Momordica dioica Roxb. ex. Willd: A Review. International Journal of Phytomedicine.
- நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு
- கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்புதி இந்து தமிழ் 30 சனவரி 2016
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.