திருத்தூதரக அரண்மனை
திருத்தூதரக அரண்மனை (இத்தாலியம்: Palazzo Apostolico) என்பது திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1] இது வத்திக்கான் நகரில் அமைந்துள்ளது. இதனை புனித அரண்மனை, திருத்தந்தையின் அரண்மனை அல்லது வத்திக்கான் அரண்மனை என்றும் அழைப்பர். ஆனாலும் ஐந்தாம் சிக்ஸ்துஸின் நினைவாக இதன் அதிகாரப்பூர்வ பெயர் ஐந்தாம் சிக்ஸ்துஸின் அரண்மனை என்பதாகும்.[1]
வரலாறு
அவிஞான் திருத்தந்தையர்களின் காலத்தில் இவ்வரண்மனை கைவிடப்பட்டு பாழானது. 1436இல் எசுப்பானிய எழுத்தாளரான பெத்ரோ தாஃபூர் என்பவர் இவ்வரண்மனை நிலையினை விவரித்துள்ளார்.[2]
தற்போது உள்ள அரண்மனை 30 ஏப்ரல் 1589இல்[3] ஐந்தாம் சிக்ஸ்துஸின் ஆட்சியில் ஆரம்பிக்கப்படு ஏழாம் அர்பன், பதினொன்றாம் இன்னசெண்ட் மற்றும் எட்டாம் கிளமெண்ட் ஆகியோரின் ஆட்சியில் படிப்படியாகக்கட்டி முடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- Vatican Press Office guide - buildings of the Vatican
- Pedro Tafur, Andanças e viaje.
- The lives of the modern painters, sculptors and architects - Giovanni Pietro Bellori
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.