தினக்குரல்
தினக்குரல் இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் ஊடாக 1997 ஆம் ஆண்டில் பொன் ராஜகோபால் தலைமையில் பிரிந்து வெளியேறிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாகும்.[1] தினக்குரல், வடக்கு கிழக்குப் பகுதிகளில் மிகவும் அறியப்பட்ட நாளிதழ் என்றாலும் ஓராண்டிற்கு மேலாக இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை, மட்டக்களப்பில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது.[1] தினக்குரல் யாழ்ப்பாணத்திற்கு தனியான பதிப்பும் ஏனைய இடங்களிற்கு தனியான பதிப்புமாக வெளியாகிறது.
![]() | |
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | ஏசியன் மீடியா பப்ளிக்கேசன்சு (பிரை) லிமிட். |
நிறுவியது | 1997 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | இல. 68, எலி ஹவுஸ் வீதி, முகத்துவாரம், கொழும்பு, இலங்கை |
இணையத்தளம் | thinakkural.lk |
மேற்கோள்கள்
- "Sri Lanka: Tamil language daily called "Thinakkural"; name of its Editor-in-Chief; whether he and his family experienced harassment, detentions and abuse by security personnel". UNHCR (14 May 2003). பார்த்த நாள் April 27, 2012.
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.