திகில் கோளாறு

திகில் கோளாறு (Panic disorder) என்பது திரும்பவும் நிகழும் திகில் தாக்குதலால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதகளிப்புக் கோளாறு ஆகும். இது திகில் தாக்குதலின்போது அதிக பதகளிப்பின் வலுவான நிகழ்வுகளின் தொடர்ச்சியை உருவாக்குகிறது. இது குறைந்தது ஒரு மாதத்திற்கு குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்களையும், பிற தாக்குதல்கள் பற்றிய கருத்துடன் அல்லது சம்மந்தப்படுத்தலுடன் தொடரும் கவலையையும் கொண்டிருக்கலாம். பின்பகுதி எதிர்பார்த்த தாக்குதல் எனவும் அழைக்கப்படுகிறது.

திகில் கோளாறு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F41.0
ஐ.சி.டி.-9300.01, 300.21
OMIM167870
நோய்களின் தரவுத்தளம்30913
MedlinePlus000924
ஈமெடிசின்article/287913
Patient UKதிகில் கோளாறு
MeSHD016584

அமெரிக்க சிறார், வாலிபப்பருவ மனநோய் மருத்துவ கல்விக்கழகத்தின்படி, திகில் கோளாறு பொதுவாக வாலிபப்பருவ காலத்தில் உருவாகி, மரபுவழியாகத் தொடரக்கூடியது. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் திகில் கோளாறை அனுபவிக்கிறார்கள்.[1]

உசாத்துணை

  1. "Panic Disorder In Children And Adolescents". பார்த்த நாள் 2015-12-11.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.