தாராபாரதி
தாராபாரதி (பிறப்பு:26 பிப்ரவரி 1947 - இறப்பு: 13 மே 2000) தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.
படைப்புக்கள்
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
- விரல்நுனி வெளிச்சங்கள்
- பூமியைத் திறக்கும் பொன்சாவி
- இன்னொரு சிகரம்
- கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்
மேற்கோள்கள்
சான்றாவணங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.