தாராபாரதி

தாராபாரதி (பிறப்பு:26 பிப்ரவரி 1947 - இறப்பு: 13 மே 2000) தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.

படைப்புக்கள்

  1. புதிய விடியல்கள்
  2. இது எங்கள் கிழக்கு
  3. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  4. விரல்நுனி வெளிச்சங்கள்
  5. பூமியைத் திறக்கும் பொன்சாவி
  6. இன்னொரு சிகரம்
  7. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

மேற்கோள்கள்

சான்றாவணங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.