தளவானூர்
தளவானூர் குடைவரைக் கோயில் (Thalavanur cave temple) அல்லது சத்ருமல்லேசுவரர் கோவில் (Satrumalleswarar Temple)[1] தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி – மண்டகப்பட்டு எனும் ஊர்களுக்கு இடையே அமைந்த தளவானூரில் அமைந்துள்ளது.
தளவானூரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது.[2] தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[3]
இக்குடைவரைக் கோயிலின் மேல்புறத்தில் சமணர் படுகைகள் உள்ளது. இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
- "The writing on the cave". தி இந்து. பார்த்த நாள் 24 சூலை 2016.
- "Thalavanur Caves". பார்த்த நாள் 24 சூலை 2016.
- Thalavanur Cave Temple
- "Dalavanur – Satrumalla Pallava Cave Temple" (20 September 2010). பார்த்த நாள் 10 February 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.