தமிழ்நாட்டில் சமயக் கிளர்ச்சி
14-15 ஆம் நூற்றாண்டுகள், தமிழ்நாட்டின் சமயக் கிளர்ச்சிக் காலம். சைவம் வைணவம் என்னும் இரண்டிலும் எழுச்சி ஏற்பட்டு சாத்திர நூல்களும் உரைநூல்களும், ஆசாரிய பீடங்களும் தோன்றி வளர்ந்தன. வைணவத்தில் மணிப்பிரவாள உரைநடை தலைதூக்கியது. சைன சமயத்தில் திருநூற்றந்தாதி, மேருமந்திர புராணம், ஸ்ரீபுராணம், திருக்கலம்பகம் முதலான நூல்கள் தோன்றின. பாட்டும் மணிப்பிரவாள நடையில் உரையும் கொண்ட சிவசம்போதனை என்னும் சைன நூலும் இக்காலத்தில் தோன்றியது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.