தமிழ் இலக்கியத் தோட்டம்
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கும் அமைப்பு ஆகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு டொரன்டோவில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாய்த் தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்றவை இதனுள் அடங்கும்.
குறிக்கோள் உரை | உலகளவில் தமிழ் மொழியறிவை வளர்ப்பதும், தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை ஊக்குவிப்பதும் |
---|---|
உருவாக்கம் | 2001 |
வகை | அறக்கட்டளை |
தலைமையகம் | டொரன்டோ,கனடா |
ஆட்சி மொழி | தமிழ் & ஆங்கிலம் |
தாளாளர் | மானுவல் ஜேசுதாசன் |
தலைவர் | செல்வா விநாயகம் |
செயலாளர் | அ.முத்துலிங்கம் |
இயக்குநர் குழுமம் | என். கே. மகாலிங்கம், செல்வம் அருளானந்தம், உஷாதேவி மதிவாணன் |
தன்னார்வலர்கள் | 22 |
வலைத்தளம் | www.tamilliterarygarden.com |
2010-ம் ஆண்டு இவ்வமைப்பு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது.
பணிகள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.