கொல்லர்
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.[1] கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

பட்டறையில் பணியில் இருக்கும் ஒரு கொல்லன்
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார், பத்தர் , ஆச்சாரி என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும்.
மேலும் இவர்கள் தங்கள் பெயரோடு ஆச்சாரி எனவும் பட்டம் சேர்த்து கொள்ளும் மரபும் உண்டது .
நாற்காலி போன்ற மரவேலைகளை செய்பவரை தச்சர் என்றும், கல்லால் ஆன உரல், ஆட்டுக்கல், அம்மி, திருகை போன்ற வேலைக்களைச் செய்பவரை கல்தச்சர் என்றும் அழைப்பர்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.