தசாங்கம்
தசாங்கம், செங்குந்தர் மரபினர்ககுரிய தசாங்கங்களைக் கூறும் நூலாகும். இந்நூல் சத்திய சந்தர் என்பவரால் இயற்றப்பட்டது.
உள்ளடக்கம்
இதில் மலை, ஆறு, நாடு, நகர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்துங் கூறப்படும். இவற்றில் செங்கோல் ஒழிய மற்றைய ஒன்பதும் இரண்டாகக் கூறப்படும் சிறப்பு கவனித்தக்கது. ஒன்று விண்ணரசுக்கும் மற்றொன்று மண்ணரசுக்குமாக அமைக்கப் பெற்றுள்ளன. இதனைச்
“ |
செப்பு தசாங்கம் இருவகைப் பெற்றவர் செங்குந்தரே |
” |
என்னும் அடி நன்கு விளக்கும். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பறவையை முன்னிலைப்படுத்திக் கூறப்படுஞ் சிறப்பு பெற்றுள்ளது.
உசாத்துணை
- காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் எழுதிய செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, 1926.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.