டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (Dr. Ambedkar Government Law College, Chennai) இந்தியாவின், சென்னை மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி எனப் பெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.
![]() | |
குறிக்கோளுரை | Fiat justitia ruat caelum ("Let justice be done though the heavens fall.") |
---|---|
வகை | அரசு சட்டக் கல்லூரி |
உருவாக்கம் | 1891 |
Parent institution | 1891-1996: சென்னைப் பல்கலைகழகம் 1996-present: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
மாணவர்கள் | 562 |
அமைவிடம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
சுருக்கப் பெயர் | AGLC |
இணையத்தளம் | http://www.draglc.ac.in/ |
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.[1]
வரலாறு

இக்கல்லூரியானது திரு. ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் சென்னைக்கென தனியாக ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள்
- கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி- முன்னாள் முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்.[2]
- ப. சிதம்பரம்- இந்திய உள்துறை அமைச்சர்-இந்தியக் குடியரசின் அமைச்சரவை.
- ப. சதாசிவம்- நாற்பதாவது இந்தியத் தலைமை நீதிபதி
- சி. சங்கரன் நாயர் - இந்திய தேசிய காங்கிரசுன் தலைவராக இருந்தவர்.
- பதஞ்சலி சாஸ்திரி - இரண்டாவது இந்தியத் தலைமை நீதிபதி
- உ. சகாயம் - இந்திய ஆட்சிப் பணி