தம்போரா எரிமலை

தம்போரா எரிமலை (அல்லது தம்போரோ) (இந்தோனேசிய மொழி: Gunung Tambora) இந்தோனேசியாவின் சும்பவா தீவில் அமைந்த சுழல்வடிவ எரிமலை. தம்போராவின் வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் கடற் புவியோட்டின் கீழமிழ்தலின் காரணமாக தம்போரா மலை முளைத்தது. 1815ஆம் ஆண்டுக்கு முன்பு 4300 மீட்டர் உயரம் அடைந்தது.

தம்போரா எரிமலை
வானத்திலிருந்து காணப்படும் தம்போராவின் 1815 வெடிப்பில் உருவாக்கப்பட்ட பெருவாய்
உயர்ந்த இடம்
உயரம்2,850 m (9,350 ft)[1][2]
இடவியல் முக்கியத்துவம்2,850 m (9,350 ft)[1][3]
பட்டியல்கள்Ultra
Ribu
புவியியல்
தம்போரா எரிமலை
இந்தோனேசியாவில் அமைவிடம்
அமைவிடம்சும்பவா, இந்தோனேசியா
State/ProvinceID
நிலவியல்
பாறையின் வயது57,000 ஆண்டுகள்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1967 ± 20 ஆண்டுகள்[1]

1815ஆம் ஆண்டில், ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தம்போரா எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்புத்தன்மை எண்ணில் ஏழு என்று அறியப்பட்ட இவ்வெடிப்பு, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். இவ்வெடிப்பின் படி நேரடியாக 11,000-12,000 மக்கள் உயிரிழந்தனர். தம்போராவிலிருந்து வானத்தில் பூசிய சாம்பலின் காரணமாக, வெய்யில் இல்லாமல் வேளாண்மை உற்பத்தி குறைந்து மேலும் 60,000 மக்கள் பட்டினி, நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உலக முழுவதிலும் தம்போராவின் உமிழ்வால் நீண்ட கால குளிர் ஏற்பட்டது. 1815 ஆண்டு "கோடைகாலம் இல்லாத ஆண்டு" என்று அறியப்பட்டு வந்தது.

மேற்கோள்கள்

  1. "Tambora". Global Volcanism Program. Smithsonian Institution.
  2. "Mountains of the Indonesian Archipelago". PeakList. PeakList.org. பார்த்த நாள் 20 June 2012.
  3. "Gunung Tambora". Peakbagger.com. பார்த்த நாள் 1 May 2009.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.