ஜதீசுவரம்
ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும்.
பரதநாட்டியம் | |
---|---|
உருப்படிகள் | |
நடனத்தின் இலட்சணங்கள் | நடனத்தின் உட்பிரிவுகள் |
உருப்படிகள் | |
அலாரிப்பு | ஜதீசுவரம் |
சப்தம் | வர்ணம் |
பதம் | தில்லானா |
விருத்தம் | மங்களம் |
நடனத்தின் இலட்சணங்கள் | |
பாவம் | |
இராகம் | தாளம் |
நடனத்தின் உட்பிரிவுகள் | |
நாட்டியம் | |
நிருத்தம் | நிருத்தியம் |
வகைகள்
இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன.
நாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்.
ஜதீசுவரம் இயற்றியோர்
- சுவாதித் திருநாள் மகாராஜா
- பொன்னையாப் பிள்ளை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.