கிள்ளிவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன்
சங்க காலச் சோழ அரசர்களில் இருவர் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது காலமானார்கள். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்போர் அவர்கள்.
கோவூர் கிழார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.[1] பிட்டை சேர வேந்தர்களில் ஒருவன்.[2] கொங்குநாட்டுக் கருவூரை இந்தக் கிள்ளிவளவன் வீழ்த்தியபோது அதன் அரசன் பிட்டை உடல் காயத்தாலும், உள்ள உளைச்சலாலும் பெரிதும் வருந்தினான்.[3] இந்தப் போர் வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் நடந்தது.[4] இவன் தன் நண்பர்களுக்கு எல்லா நலன்களும் உதவும் பண்பினன்.[5]
அடிக்குறிப்பு
- புறநானூறு 373
- வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
- பிட்டை ஊறு உவப்ப ... கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
- வஞ்சிமுற்றம் வயக் களன் ஆக அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் கொண்டனை பெரும குடபுலத்து அதரி.
- நகைவர்க்குத் தா இன்றி உதவும் பண்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.