சேறைக் கவிராச பிள்ளை
கவிராச பிள்ளை என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் சேறைக் கவிராசன் என்றும் போற்றப்படுகிறார். இந்தப் பெயரை இவர் தன் உலாக் கண்ணியிலேயே குறிப்பிட்டுள்ளார்.[1] இவர் கருணேசன் [2] மரபினர்.
இதே நூற்றாண்டில் வாழ்ந்த வீரை கவிராச பண்டிதன் என்பவர் சௌந்தரிய லகரி என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரிலிருந்து வேறு பிரித்துக்கஃ காட்டவே இவர் தம்மைச் ‘சேறைக் கவிராசன்’ எனக் கூறிக்கொண்டார். சேறை என்னும் ஊர் திருச்சேறை என வழங்கப்படும் திருமால் பதி.[3]
அதிவீரராம பாண்டியருக்கு இவர் எழுதி அனுப்பியதாக ஒரு சீட்டுக்கவி பாடல் உண்டு. எனவே இவரது காலம் அந்த அரசன் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது.
இவரால் பாடப்பட்ட நூல்கள்:
- திருக்காளத்தி நாதர் உலா
- திருவண்ணாமலையார் வண்ணம்
- சேயூர் முருகன் உலா
- திருவாட்போக்கி நாதர் உலா
- திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை
என்பன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
-
- செவி ராசியம் கடந்த சேறைக் – கவிராசன்
- சொன்ன உரை படித்துத் சோதி பெறத் தாலாட்டி
- கணக்கர் என்னும் கருணீகர்
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் சாரநாதப் பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் உள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.