சேரலர்
சுள்ளியம் பேரியாறு பாய்ந்த சேர்ப்பு [1] நாடே நேரநாட்டின் தலைமைப் பகுதி. [2]
சேரநாட்டு மக்கள் சேரலர்.
இதன் வேந்தன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ‘சேரலர் வேந்து’ எனப் பாராட்டப்படுகிறான். [3]
கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதன் ‘சேரலர் மருகன்’ எனப் பாராட்டப்படுகிறான். [4] மருகன் என்றால் மரபில் வந்தவன் என்பது பொருள்.
காரி ஓரியைக் கொன்று கொல்லி நாட்டைச் சேரலர்க்கு ஈந்தான். [5]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரில் உள்ள ‘சேரல்’ என்னும் பெயரே இவன் சேரலர் பெருமான் என்பதை விளக்குகிறது.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- கடலும் நிலமும் சேரும் கடற்கரை
- சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினைமாணு நன்கலம் - அகநானூறு 149-7,
- பதிற்றுப்பத்து 38-8,
- பதிற்றுப்பத்து 63-16
- அகநானூறு 209-14
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.