சேரலர்

சுள்ளியம் பேரியாறு பாய்ந்த சேர்ப்பு [1] நாடே நேரநாட்டின் தலைமைப் பகுதி. [2]

சேரநாட்டு மக்கள் சேரலர்.

இதன் வேந்தன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ‘சேரலர் வேந்து’ எனப் பாராட்டப்படுகிறான். [3]

கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதன் ‘சேரலர் மருகன்’ எனப் பாராட்டப்படுகிறான். [4] மருகன் என்றால் மரபில் வந்தவன் என்பது பொருள்.

காரி ஓரியைக் கொன்று கொல்லி நாட்டைச் சேரலர்க்கு ஈந்தான். [5]

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரில் உள்ள ‘சேரல்’ என்னும் பெயரே இவன் சேரலர் பெருமான் என்பதை விளக்குகிறது.

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. கடலும் நிலமும் சேரும் கடற்கரை
  2. சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினைமாணு நன்கலம் - அகநானூறு 149-7,
  3. பதிற்றுப்பத்து 38-8,
  4. பதிற்றுப்பத்து 63-16
  5. அகநானூறு 209-14
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.