செம்மலர் (இதழ்)
செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். இது கடந்த நாற்பது ஆன்டுகளாக மதுரையிலிருந்து வெளிவருகிறது. நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ்.ஏ.பெருமாள் பணியாற்றுகிறார். இன்று தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் பெரும்பாலோர் செம்மலரில் எழுதத்துவங்கியவர்கள்தான். புதிதாக எழுத ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முக்கிய இலக்கியப் பணியினையும் செம்மலர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
செம்மலர் | |
---|---|
வெளியீட்டாளர் | |
ஆசிரியர் | எஸ்.ஏ.பெருமாள் |
வகை | தமிழ் இலக்கிய இதழ் |
வெளியீட்டு சுழற்சி | மாதம் ஒரு முறை |
முதல் இதழ் | |
நிறுவனம் | |
நகரம் | மதுரை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | செம்மலர், தீக்கதிர், 6/16 புறவழிச் சாலை, மதுரை -625 002, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் | செம்மலர் இதழுக்கான இணையப் பக்கம் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.