சுகர்

சுகர் (Śuka) [1][2] சுகதேவர், சுகதேவ கோசுவாமி என அழைக்கப்படுபவர். வேதங்களை நான்காகப் பகுத்தவரும் பாகவதம் எனப்படும் புராணத்தை எழுதியவருமான வியாச முனிவரின் புதல்வன் ஆவார். மகாபாரததில் வரும் அர்ஜுனனின் பேரனான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார்[3]. இவர் அத்வைத இருடிகளின் மரபு வழியில் வந்த ஐந்தாவது இருடி ஆவார். சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவர்.

சுகர் முனிவர்களுக்கு உபதேசித்தல்
பரிசிட்த்து மன்னனுக்கு சுகர் பாகவத புராணத்தை உபதேசித்தல்


மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.