சீயகங்கன்
சீயகங்கன் கங்கர் பரம்பரையில் வந்த ஓர் அரசன். சங்க காலக் கங்கன் வழியில் வந்தவர் இந்தக் கங்கர். கங்கர் சமண மதத்தினர். சீயகங்கன் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றக் காரணமாக இருந்தவன். நன்னூல் இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவரையும், இந்தப் பவணந்தியார் காலத்திலேயே நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரையும் பேணிப் பாதுகாத்தவன்.
இவனது மெய்க்கீர்த்தி இவனை அமராபரணன், ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுரன் [1] கங்க குலோற்பவன் என்றெல்லாம் பாராட்டுகிறது. இவனுக்குத் திருவேகம்பமுடையான் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிவிக்கிறது. [2]
சீயகங்கன் மதுராந்தகப் பொத்தம்பிச் சோழனின் மைத்துனன். (மனைவியின் உடன்பிறப்பு). [3]
கருவிநூல்
- நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன் அவரது மகன் கலியாண சுந்தரையர் பதிப்பு, 1946 டி. ஏ. கோபிநாதையர் 'செந்தமிழ்' இதழ் நான்காம் தொகுதி மேற்கோள்.
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- குவலாளபுரம் என்னும் ஊர் ஜோலார்பேட்டையிலிருந்து பெங்களூர் சொல்லும் வழியில் உள்ளது.,
- மூன்றாம் குலோத்துங்க தேவனுடைய 27ஆம் ஆண்டுக் கல்வெட்டு (கி. பி. 1205)
- கங்கன் சங்ககாலத்தில் சோழனை எதிர்த்தான். இவன் மேலைக்கங்கரின் முன்னோன். கங்கன் வழிவதந்த கங்கர்குல அரசன் சீயகங்கன் கீழைக்கங்கர் வழிவந்தவன். இவன் காலத்தில் சோழர் குடியினரோடு மண உறவு இருந்தது. சங்ககாலத்திலும் சரி, சீயகங்கனின் 13-ஆம் நூற்றாண்டிலும் சரி இந்தக் கங்கர்கள் தமிழர்களே.
வெளியினைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.