சாந்தி சுவரூப் பட்நாகர்
எஸ். எஸ் பட்நாகர் என்றறியப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர்(Sir Shanti Swaroop Bhatnagar:இந்தி: , OBE, FRS, 21 பிப்ரவரி, 1894 – 1 ஜனவரி, 1955) ஒரு நன்கறியப்பட்ட இந்திய இயற்பியலாளரும் அறிவியலறிஞரும் ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். 1894 இல் தற்போது பாகிஸ்தானிலுள்ள ஷாப்பூர் எனுமிடத்தில் பிறந்தவர். ஓர் ஆங்கிலேய நிறுவனம் எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட தொழில் நுட்பச் சிக்கலை எளிய முறையில் தீர்த்து வைத்தவர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தவர். இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இவருடைய பெயரால் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது.
சாந்தி சுவரூப் பட்நாகர் | |
---|---|
சாந்தி சுவரூப் பட்நாகர் | |
பிறப்பு | பெப்ரவரி 21, 1894 பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1 சனவரி 1955 60) புது தில்லி, இந்தியா | (அகவை
வாழிடம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | |
துறை | வேதியல் |
பணியிடங்கள் | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பஞ்சாப் பல்கலைக் கழகம் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
ஆய்வு நெறியாளர் | பிரடெரிக் டொனன் |
அறியப்படுவது | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
விருதுகள் | பத்ம பூஷன் (1954) சர் (1941) OBE (1936) |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- Richards, Norah (1948). Sir Shanti Swaroop Bhatnagar F. R. S.: A Biographical Study of India's Eminent Scientist. புது தில்லி, இந்தியா: New Book Society of India.
- Seshadri, T. R. (November 1962). "Shanti Swaroop Bhatnagar. 1894-1955". Biographical Memoirs of Fellows of the Royal Society (London: Royal Society) 8: 1–17. doi:10.1098/rsbm.1962.0001.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.