சல்மா (கவிஞர்)
சல்மா ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.[1] தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.[2]
கவிஞர் சல்மா | |
---|---|
தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் | |
தொகுதி | மருங்காபுரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 19, 1967 சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க. |
வாழ்க்கை துணைவர்(கள்) | அப்துல் மாலிக் |
பிள்ளைகள் | சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் |
இருப்பிடம் | சென்னை |
கவிதைத் தொகுப்புகள்
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
- பச்சை தேவதை
- இரண்டாம் ஜாமங்களின் கதை
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.