சரத் பொன்சேகா

ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு: 18 திசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார்.

படைத்துறை உயர் தளபதி
சரத் பொன்சேகா
Sarath Fonseka
பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 பெப்ரவரி 2016
இலங்கை நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
09 பெப்ரவரி 2016
முன்னவர் எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010  7 அக்டோபர் 2010
சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 ஏப்ரல் 2013
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர்
பதவியில்
15 சூலை 2009  30 நவம்பர் 2009
இராணுவத் தளபதி
பதவியில்
6 டிசம்பர் 2005  15 சூலை 2009
தனிநபர் தகவல்
பிறப்பு கார்திகேவா சரத் சந்திரலால் பொன்சேகா
18 திசம்பர் 1950 (1950-12-18)
அம்பலாங்கொடை, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி சனநாயகக் கடி
(2013 - இன்று)
சனநாயகத் தேசியக் கூட்டணி
(2010 - 2013)
புதிய சனநாயக முன்னணி
(2009–2010)
வாழ்க்கை துணைவர்(கள்) அனோமா பொன்சேகா
பிள்ளைகள் அபர்ணா, அப்சரா
படித்த கல்வி நிறுவனங்கள் மடவலலந்தை மகா வித்தியாலயம், அம்பாறை,
தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை

ஆனந்தா கல்லூரி
பணி அரசியல்வாதி
இராணுவ அதிகாரி
சமயம் தேரவாத பௌத்தம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு இலங்கை
கிளை இலங்கை படைத்துறை
பணி ஆண்டுகள் 1970–2009,
2015–இன்று
தர வரிசை பீல்டு மார்சல்
படையணி இலங்கை சிங்கப் படை
படைத்துறைப் பணி இராணுவத் தளபதி
சமர்கள்/போர்கள் ஈழப் போர்,
1987-89 ஜேவிபி புரட்சி

இவர் தமிழ் மக்கள் 20000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 16, 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.[1][2]

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்[3].

மீண்டும் பதவியில்

மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[4]. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் பீல்டு மார்சல் எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கூறுகிறது.[5][6]

ஆதாரங்கள்

  1. இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல் பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009.
  2. இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார் பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.
  3. Fonseka convicted by Sri Lanka court martial (ஆங்கில மொழியில்)
  4. http://edition.cnn.com/2015/01/22/world/sri-lanka-fonseka/ Sri Lanka's ex-army chief Sarath Fonseka reinstated by new government
  5. http://www.asianmirror.lk/news/item/7439-sarath-fonseka-to-be-appointed-field-marshal Sarath Fonseka To Be Appointed Field Marshal?
  6. பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா
  1. பிபிசி செய்திகள்
  2. லங்கா செய்திகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.