சமணத்தில் அகிம்சை
எந்தவொரு உயிருக்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாமை, வன்முறையைப் பயன்படுத்தாமை அகிம்சை எனப்படுகிறது. சமண அறக் கோட்பாட்டில் அகிம்சை ஒரு முதன்மைக் கொள்கையான அமைகிறது. மரக்கறி உணவு, வாயுக்கு முகமூடி அணிதல், நடக்கும் போது சிறு பூச்சிகளை அகற்றி நடத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த அகிம்சைக் கொள்கை அடிப்படையாக அமைகிறது.
காந்தியின் அறப்போராட்ட வடிவம் சமண சமயத்தின் இந்த அறக் கொள்கையின் பாதிப்பில் அமைந்தது. அகிம்சை பற்றிய சமணக் கருத்துக்களை காந்தி அவரது நண்பரான சிறீமத் ரவிச்சந்திரா ஊடாகப் பெற்றுக் கொண்டார்.

ஹிம்சை பற்றி 17ம் நூற்றாண்டு கால குஜராத்திய ஓவியம்
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.