இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University of Sri Lanka) இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் பெலிகுல் ஓயா, பலாங்கொடை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1991 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது.
சபரகமுவா பல்கலைக்கழகம் இலங்கை | |
---|---|
குறிக்கோள்: | நத்தி பகந சாம ஆப்ஹா (பாளி) |
நிறுவல்: | 1991 |
வகை: | பொது |
வேந்தர்: | பேரா. சங். குபுருகமுவ வஜிர தேரர் |
துணைவேந்தர்: | பேரா. எம்.எஸ்.ரூபசிங்க |
ஆசிரியர்கள்: | 200 |
மாணவர்கள்: | 2500 |
அமைவிடம்: | பலாங்கொடை, இரத்தினபுரி, இலங்கை |
நிறம்: | Maroon,Gold |
இணையத்தளம்: | http://www.sab.ac.lk/ |
வரலாறு
சபரகமுவ பல்கலைக்கழகம், சபரகமுவ மாகாணத்தில் அமைந்து காணப்படுகின்றது. பல வளங்களைகொண்ட இப்பல்கலைக்கழகம் வளமிக்க மாணவர்களை உருவாக்க ஆரம்பித்தது. அத்துடன் ஆங்கில கற்கைநெறி, தொழிற்பயிற்சி கல்விமுறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம். மாணவர்களின தேவைகள் குறித்து அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசாவினால் 02.28.1992 அன்று கணணிக்கூடமும் நுலகமும் நிறுவப்பட்டது.
பீடங்கள்
- விவசாய விஞ்ஞான பீடம்
- பிரயோக விஞ்ஞான பீடம்
- பூகோள விஞ்ஞான பீடம்
- முகாமைத்துவ பீடம்
- சமூக விஞ்ஞானங்கள் மொழிகள் பீடம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.