ரணசிங்க பிரேமதாசா

ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23, 1924 - மே 1, 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழில்: சனாதிபதியாவார்). இவர் அதிபராவதற்கு முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் பலர் இரகசியமான முறையில் கடத்தப்பட்டு பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு இவர் ஆருடத்தில் (சோதிடம்) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.[1]. இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாசா
இலங்கையின் 3வது சனாதிபதி
பதவியில்
ஜனவரி 2 1989  மே 1 1993
முன்னவர் ஜே.ஆர்.
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
இலங்கையின் 11வது பிரதமர்
பதவியில்
February 6, 1978  March 3, 1989
முன்னவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூன் 23, 1924
இலங்கை
இறப்பு மே 1 1993
கொழும்பு
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கேமா பிரேமதாசா
சமயம் பௌத்தம்

உசாத்துணைகள்

  1. Jonathan Lyons (August 20, 2006). "Suicide bombers - weapon of choice for Sri Lanka rebels". Reuters.
அரசு பதவிகள்
முன்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை சனாதிபதி
1989–1993
பின்னர்
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
முன்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை பிரதமர்
1978–1989
பின்னர்
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.