சன் சிங்கர்
சன் சிங்கர் (ஆங்கிலம்: Sun Singer) என்பது தமிழ் மொழியில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு முதன்மையானதும் தொலைக்காட்சியில் பாடும் போட்டியுமாகும். இது தமிழ்நாட்டில் 6 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாடும் திறமைக்கான வேட்டையாகும்..
சன் டிவியின் வலைத்தளத்தின்படி, இந்த நிகழ்ச்சி அதன் இந்திய பாடும் போட்டி மற்றும் மெகா ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான சப்தஸ்வரங்கலின் மறுசீரமைக்கப்பட்ட பதிப்பாகும்.[1][2] சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி பல பருவங்களுக்கு புதுப்பிக்கப்பட்டு, சன் டிவியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டது, and introducing multiple playback singers including சின்மயி, கார்த்திக், மஹதி, ரஞ்சித், மற்றும் வினய் கார்த்தி ராஜன் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சப்தஸ்வரங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.[1][2] இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
பருவம் 1
நிகழ்ச்சியின் முதல் பருவத்தை "கேட்பரி ஓரியோ" நிதியுதவி செய்தது. மேலும் விகேர், ஜிஆர்பி உதயம் நெய் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கினார். இதனை பாடகர் மானசி தொகுத்து வழங்கினார். பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான நிரந்தர நடுவர்களாக தோன்றினர். பாடலாசிரியரும் இசை இயக்குநருமான கங்கை அமரன் நிகழ்ச்சியின் நிரந்தர குரல் பயிற்சியாளராக தோன்றினார்.
பருவம் 2
நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தை "புதிய கேட்பரி ஓரியோ ஸ்ட்ராபெரி கிரீம்" வழங்கியது. மேலும் வி.கேர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கியது. பருவம் இரண்டின் ஒவ்வொரு பகுதியும் நடிகை நிஷா கிருஷ்ணன், தொடங்கி, பி ஒய் தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேஷ்மா பசுபுலேட்டயைத் தொடர்ந்து, பாடலாசிரியரும் இசை இயக்குநருமான கங்கை அமரனும், கடைசியாக பாடகர் கமலஜா ராஜகோபாலும் தொடர்ந்தனர். பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இந்த பருவத்திற்கான நிரந்தர நடுவர்களாக திரும்பினர். கங்கை அமரன் நிகழ்ச்சியின் நிரந்தர குரல் பயிற்சியாளராக திரும்பினார்.
பருவம் 3
நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தை "புதிய கேட்பரி ஓரியோ ஸ்ட்ராபெரி கிரீம்" வழங்கியது. மேலும் விகேர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிரீமியர் குக்வேர் & அப்ளையன்ஸ் இணைந்து வழங்கியது. பருவத்தின் இரண்டாம் பாதியை ஐஸ்வர்யா பிரபாகர் தொகுத்து வழங்கினார். அதே நேரத்தில் அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி, கங்கை அமரன் ஆகியோர் நிரந்தர நடுவர்களாக திரும்பினர்.
இந்த பருவத்தின் வெற்றியாளர் நிகழ்ச்சியின் புரவலர்களிடமிருந்து தொடர்ச்சியான பரிசுகளை பெற்வார் என் அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதி வெற்றியாளராக ஒரு கோப்பையும் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டிகளில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர், இது 1 டிசம்பர் 28, 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது. போட்டியின் முடிவுகள் இரண்டாம் பகுதி ஒளிபரப்பில் 4 ஜனவரி 2015 அன்று தலைமை விருந்தினரான இசை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாரால் அறிவிக்கப்பட்டது. 4 ஜனவரி 2015 அன்று போட்டியில் ஸ்ரேயா ஜெய்தீப் மூன்றாம் பருவத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியில் சாண்ட்ரா ரன்னர்-அப் ஆக முடிசூட்டப்பட்டார். மேலும் ஸ்வேதா ஸ்ரீ என்ற போட்டியாளர் சிறப்பு விருது வழங்கப்பட்டது..
பருவம் 4
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பானது. இதை நட்சத்திரா & முத்து தொகுத்து வழங்குகினார்கள். நிகழ்ச்சியின் நான்காம் பருவத்தை கேட்பரி ஓரியோ நிதியுதவி செய்தது. மேலும் விகேர், ஜிஆர்பி உதயம் நெய், மற்றும் வசந்த் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களும் நிதியுதவி செய்தது.