சந்திரசேகர சரசுவதி


சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார்.

சந்திரசேகர சரசுவதி
1933 இல் எடுக்கப்பட்ட சுவாமிகளின் படம்
பிறப்புசுவாமிநாதன்
மே 20, 1894
இறப்புசனவரி 8, 1994
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம்
பட்டம்சகத்குரு
பின் வந்தவர்ஜெயேந்திர சரசுவதி

இளமை வாழ்வு

தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். சுவாமிநாதன் தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடம்.

வெளியிணைப்புகள்

http://hinduonline.co/VideoGallery.html http://hinduonline.co/Books/BooksOnline.html

உசாத்துணைகள்

    • A search in Secret IndiaPaul Brunton
    • Sri Kanchi Mahaswamy Charitram
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.