கே. ராணி

கே. ராணி (1943 - 13 சூலை 2018)[1] தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 500 இற்கும் அதிகமான பாடல்களை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளி, சிங்களம், உசுப்பெக் மொழிகளில் பாடியுள்ளார். ராணி இலங்கையின் "சிறீ லங்கா தாயே" என்ற தேசியப் பண்ணைப் பாடியுள்ளார்.[2]

கே. ராணி
பிறப்பு1943
இறப்புசூலை 13, 2018
கல்யாண் நகர், ஐதராபாது
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1951–1963

இந்திய தேசிய காங்கிரசு தலைவர் காமராசர் இவருக்கு "இன்னிசை ராணி" எனப் பட்டம் சூட்டினார்.[2]

பாடல்கள்

தமிழ்ப் பாடல்கள்

பாடல்படம்இணைந்து பாடியோர்பாடலாசிரியர்இசை
கொண்டாட்டம் கொண்டாட்டம்போர்ட்டர் கந்தன்திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன்
செல்லமுத்து, மாதவன்
அ. மருதகாசிவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
கண்ணால் நல்லாப் பாருசாரங்கதரா (1958)பி. பானுமதி, ஏ. பி. கோமளாஅ. மருதகாசிஜி. இராமநாதன்
காந்தம் போலப் பாயும்நல்லகாலம் (1954)உடுமலை நாராயணகவிகே. வி. மகாதேவன்

இசுலாமியப் பாடல்கள்

நாகூர் ஈ. எம். ஹனீஃபாவுடன் இணைந்து பாடிய சில இசுலாமியப் பாடல்கள்:

  • ஓடுவோம் வாருங்கள்
  • தீனோரே நியாயமா மாறலாமா
  • வாழ வாழ நல்ல வழிகள் உண்டு
  • அருள் மேவும் ஆண்டவனே

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.