கே. ஏ. ஜவாஹர்

கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர். நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது.

மேடைநாடகத்துறையில்

முதலாவது மேடை நாடகம் - 1964ல் புரட்சிமணி இயக்கிய "ஒருத்தி சொன்னாள்". தொடர்ந்து பல மேடை நாடக்ங்களில் நடித்துள்ளார். 1969ல் தினகரன் நாடகவிழாவில் "வாடகைக்கு அறை", "மனிததர்மம்" ஆகிய நாடகங்களில் நடித்து சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றார். 1974ல் தேசியநாடகவிழாவில் சுஹேர் ஹமீட்டின் இயக்கத்தில் " பிள்ளை பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார் " என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருதினைப் பெற்றவர்.

வானொலியில்

இலங்கை வானொலியில் முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களில் நடித்தவர்.

ஒலிநாடாக்கள்

"அபூநானா" என்ற பாத்திரத்தில் இவர் நடித்த ஐந்து நகைசுவை நாடகங்கள் ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளன.

திரைப்படங்களில்

இவரது முதலாவது திரைப்படம் வி.பி.கணேசன் தயாரித்த 'புதியகாற்று' என்ற திரைப்படமாகும்.

தொடர்ந்து 'வாடைக்காற்று' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து பாராட்டு பெற்றவர். 'கோமாளிகள்', 'நான் உங்கள் தோழன்', 'ஏமாளிகள்', 'தென்றலும் புயலும்', 'தெய்வம் தந்த வீடு', , 'ஷர்மிளாவின் இதய ராகம்' போன்ற பல படங்களில் நடித்தவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.