குவாந்தான்

குவாந்தான் (Kuantan) மலேசியா நாட்டிலுள்ள பகாங் மாநிலத்தின் தலைநகரமாகும். இதன் பரப்பளவு ஏறதாள 36,000கிமீ² ஆகும். இங்கு 57% மலாய் மக்களும், 32% சீன மக்களும், 4% இந்திய மக்களும் மற்றும் 7% மற்ற இனத்தாரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். குவாந்தான் மாநகரம், குவாந்தான் ஆற்றுக்கு அருகாமையிலும் தென் சீன கடலை நோக்கியவாறு அமையப் பெற்று இருக்கிறது. 1976-ஆம் ஆண்டு வாக்கில் கோலா லிப்பீஸ்லிருந்து மாநில ஆட்சி மையம் குவாந்தான் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது.

குவாந்தான்
Kuantan
அடைபெயர்(கள்): 'பூங்கா நகரம்'
நாடுமலேசியா
மாநிலம்பகாங்
நிறுவல்1851
அரசு
  நகர முதல்வர்அட்னான் யாக்கோப்
ஏற்றம்22
மக்கள்தொகை (2010)
  மொத்தம்607
நேர வலயம்மநே (ஒசநே+8)
இணையதளம்http://mpk.gov.my/

மேற்கு தீபகற்ப மலேசியாவின் மிக பெரிய நகரமான குவாந்தானில் ஏறக்குறைய 607,778 மக்கள் குடியிருக்கின்றனர். தென் சீன கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், குவாந்தான் மாவட்டம் கடற்கரைகளுக்குப் பிரசித்திப் பெற்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.