குவகாத்தி
குவகாத்தி (Guwahati, அசாமிய: গুৱাহাটী) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள காமரூப் மாவட்டத்தில் பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, வடகிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகின்றது.[1] குவகாத்தியின் புறநகரில் இருக்கும் தேஜ்பூர் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரமாகும். ஆனால் குவகாத்தி அசாமின் தலைநகராக சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
குவகாத்தி | |
— மாநகராட்சி — | |
அமைவிடம் | 26°09′N 91°46′E |
நாடு | ![]() |
மாநிலம் | அஸ்ஸாம் |
மாவட்டம் | காம்ரூப் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | ஸர்பாநந்த ஸோநொவால் |
மக்களவைத் தொகுதி | குவகாத்தி |
மக்கள் தொகை | 9,57,352 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 53 மீட்டர்கள் (174 ft) |
இணையதளம் | https://gmc.assam.gov.in |
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கவுகாதி மாநகராட்சியின் மக்கள்தொகை 9,57,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 4,95,362 மற்றும் பெண்கள் 4,61,990 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.24 % ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.74 %, இசுலாமியர்கள் 12.45 %, சமணர்கள் 0.96 %, கிறித்தவர்கள் 0.93 %, சீக்கியர்கள் 0.36 % மற்றவர்கள் 0.58% ஆகவுள்ளனர். [2]
காமாக்யா கோவில்
இங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.