குழமகன் (பாட்டியல்)
பாட்டியலில் குழமகன் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். உயர்குலப் பெண்களின் கையில் உள்ள ஆண் குழந்தையைக் கண்டு அக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதே குழமகன் என்பது பாட்டியல் இலக்கணம்.[1] இது கலிவெண்பாவில் அமையும். குழமகன் என்பது ஆண் குழந்தை என்று பொருள்படும். எனவே ஆண் குழந்தையைப் பாடும் இலக்கியமும் குழமகன் என்னும் பெயரைப் பெற்றது.
குறிப்புகள்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 870
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.