காந்தரூபன் அறிவுச்சோலை
காந்தரூபன் அறிவுச்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த ஆண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1993 கார்த்திகை 13ஆம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். இவ்வில்லத்தில் 2005 வாக்கில் 227 பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர்.
நான் ஒரு அனாதை,அப்பா அம்மா இல்லாத பிள்ளை.நான் பட்ட துன்பத்தை என் போன்ற பிள்ளைகள் படக் கூடாது. இது போன்ற பிள்ளைகளை எடுத்து வளர்க்க வேண்டுமெனக் கரும்புலி மேஜர் காந்தரூபன் பிரபாகரனிடம் சொன்ன கடைசி ஆசை. அதனால் அந்தக் காந்தரூபன் பெயரிலேயே துவக்கப்பட்டது இந்தச் சிறுவர் இல்லம்[1]
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக்.31
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.