கருப்பொருள் (இலக்கணம்)

தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது[1]. இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு:

  1. ஆரணங்கு (தெய்வம்)
  2. உயர்ந்தோர்
  3. அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)
  4. புள் (பறவை)
  5. விலங்கு
  6. ஊர்
  7. நீர்
  8. பூ
  9. மரம்
  10. உணா (உணவு)
  11. பறை
  12. யாழ்
  13. பண்
  14. தொழில்

குறிப்புகள்

  1. ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண் தொழில் எனக் கருவி ஈர் எழு வகைத்து ஆகும் - அகப்பொருள் விளக்கம், பாடல் 19

உசாத்துணைகள்


இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.