கருப்பசாமி
கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாக பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.
கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
உருவம்

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[1]
மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் பெருமாளாக சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில் முத்து கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலி கருப்புசாமி மிகவும் உக்ரம் கொண்டவராகவும், அவரை அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டு சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கருப்புசாமி உள்ளார்.
நம்பிக்கை
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம்.[2]
கோயில்
தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராம கோயில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.
விளைநிலங்களில்
விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.
கருப்புசாமிக்கு பிற பெயர்கள்
108 கருப்புசாமிகள் உள்ளதாகவும், 1008 கருப்புசாமிகள் உள்ளதாகவும் நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இடங்களில் கருப்புசாமிக்கு உருவம் இல்லாமல் பதிவு வைத்து வழிபடுகின்றனர். அத்தகைய இடங்களில் பெயரே முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இத்தனை வகையான கருப்பு சாமிகளுள் சிலவற்றுக்கு மட்டுமே உருவங்கள் கொடுக்கப்பட்டு வரையரை செய்யப்பட்டுள்ளன. 108 கருப்புசாமிக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
- சங்கிலி கறுப்பன்
- மார்நாடு கருப்பசாமி ( சின்னப்பேராலி, விருதுநகர் )
- சங்கிலி கருப்பன்
- கருப்பனார் சாமி
- குல கருப்பனார்
- கருப்பனார்
- பதினெட்டாம்படியன் (ஐயப்பனின் பதினெட்டு படிகளுக்கும் காவல் தெய்வமாக இவர் விளங்குவதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.)
- சின்ன கருப்பசாமி
- பெரிய கருப்பசாமி
- மளுவேந்தி கருப்பணசாமி
- மீனமலை கருப்பசாமி
- முன்னோடை கருப்பசாமி
- நொண்டி கருப்பசாமி
- ஒண்டி கருப்பசாமி
- கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ கருப்பசாமி)
- கோட்டை வாசல் கருப்பசாமி
- அச்சன்கோவில் கருப்பசாமி.
- மடை கருப்பசாமி
- ஆகாச கருப்பு
கோயில்கள்
- கொக்கு வெட்டி கருப்பசாமி கோயில், திருச்சி-நாமக்கல் சாலையில் உள்ளது.
- ராமநாதபுரம் கருப்பசாமி கோயில், வடக்கு தெரு யானாக்கல் வீதி[3]
- பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோயில்[4]
- பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில்
- ஸ்ரீமலையாள கருப்பசாமி கன்னிமார் திருக்கோவில், சம்பப்பட்டி கிராமம், நத்தம் தாலுக்கா திண்டுக்கல் மாவட்டம்.
- மதுரை மேலமடை அருள்மிகு ஸ்ரீ மளுவேந்தி கருப்பணசாமி - இராக்காயி
- ஆகாச கருப்பு சாமி கோவில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நொச்சிக்குளம் கிராமம்
- குருவிகுளம் கருப்பசாமி (திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம்)
- அழகர் கோவில் கருப்பசாமி
- ஸ்ரீமலையாள கருப்பசாமி கோவில், கீரனூர் கிராமம், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்
- ஸ்ரீமலையாள கருப்பசாமி கோவில், வெள்ளைப்பாறை கிராமம், வேடசந்தூர் , திண்டுக்கல் மாவட்டம்
- ஸ்ரீமலையாள கருப்பசாமி கோவில், கோமட்டேரி கிராமம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்
- பெரியகொடிவேரியில் உள்ள கடல்லண்ண கருப்பராயர் திருக்கோயில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம்
மதுரை மாவட்டம்.
- கடம்பூர் ஸ்ரீ பெரிய கருப்பசாமி கோயில் ,கடம்பூர்
- ஸ்ரீ வன்னிக்கருப்பண்ண சுவாமி இராமநாதபுரம் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமம்.
- இராஜபாளையம் வட்டம் சமுசிகாபுரம் பஞ்சாயத்து அருகே உள்ள பி. டி. ஆர் நகர் கருப்பசாமி செல்வ மாரியம்மன் அருகில் உள்ள சூளாயுதத்தில் குடி கொண்டுள்ளார்.
அடிக்குறிப்பு
- ":: TVU ::".
- கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்
- "கருப்பசாமி கோயில் ஆடித்திருவிழா!".
- "பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோயில் விழா: கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம்".