கன்சிராம்

கன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006) இந்திய அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியான பகுசன் சமாச் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சிராம், தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.

கன்சிராம்
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர்
பதவியில்
1984–1995
பின்வந்தவர் மாயாவதி குமாரி
ஹோஷியார்பூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னவர் கமல் சவுத்திரி
பின்வந்தவர் கமல் சவுத்திரி
இட்டாவா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னவர் ராம்சிங் சாக்கியா
பின்வந்தவர் ராம்சிங் சாக்கியா
தனிநபர் தகவல்
பிறப்பு 15 மார்ச் 1934
பஞ்சாப்[1]
இறப்பு 9 அக்டோபர் 2006
புது தில்லி
அரசியல் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி
சமயம் பௌத்தம்
இணையம் Official Site

கன்சிராம் அம்பேத்கரின் ஐம்பதாவது நினைவு நாளான அக்டோபர் 14 ஆம் நாளன்று சமயத்தைத் தழுவ இருந்தார் ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அக்டோபர் 9 அன்று இறந்தார்.[2] ஆனால் அவரின் இறுதிச் சடங்குகள் பௌத்த சமயத்தின் படி நடந்தன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.