க. ப. அறவாணன்
க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
க. ப. அறவாணன் | |
---|---|
பிறப்பு | அருணாசலம் ஆகத்து 9, 1941 திருநெல்வேலி மாவட்டம் |
இறப்பு | திசம்பர் 23, 2018 77) சென்னை | (அகவை
தேசியம் | இந்தியா |
கல்வி | எம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி. |
பணி | தமிழ்ப்பேராசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | தாயம்மாள் அறவாணன் |
பிள்ளைகள் | அருள்செங்கோர், |
கல்வி
சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.
பணி
- தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
- முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
- தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
- ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல்.
- தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை.
- தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி.
- துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி.
எழுதிய நூல்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
- அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
- அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
- அற்றையநாள் காதலும் வீரமும்
- கவிதை கிழக்கும் மேற்கும்; 1975, தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29. [2]
- காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
- கல்வித்துறை உருப்பட
- சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[3]
- தொல்காப்பிய ஒப்பியல்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
- தொல்காப்பியக் களஞ்சியம்; 1975; பாரிநிலையம், சென்னை. [2]
- தமிழரின் தாயகம்; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- தமிழ்ச் சமுதாய வரலாறு
- தமிழ் மக்கள் வரலாறு[4]
- புரட்சிப்பொறிகள் (கவிதை)
- Collected Papers on Tamilogy
பதிப்பித்த நூல்கள்
க. ப. அறவாணன் பின்வரும் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்:
- அவிநயம்:மூலமும் உரையும்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
இதழ் ஆசிரியர்
இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்
- அறிவியல் தமிழியம்
- தேடல்
- முடியும்
- கொங்கு
பதிப்பாசிரியர்
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
அறவாணர் விருது
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
விருதுகளும் கௌரவங்களும்
- தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
- 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
மேற்கோள்கள்
- "முனைவர் க ப அறவாணன்-நேர்காணல்". archive.is (2 February 2014). மூல முகவரியிலிருந்து 2 February 2014 அன்று பரணிடப்பட்டது.
- தில்லைநாயகம், வே (பதி); நூல்கள் அறிமுகவிழா; தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறை, 1976; பக். 16
- http://www.idref.fr/060975016
- "தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம்". தமிழ்க் கோட்டம், 2013 Ceṉṉai : Tamil̲k Kōṭṭam (23 December 2018).