சி. சிவலிங்கராசா

யாழ் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறை பேராசிரியர் சி. சிவலிங்கராசா (பி:கரவெட்டி, யாழ்ப்பாணம்), பல ஆய்வு நூல்களை எழுதி உள்ளார். இவர் பண்டிதர் கே. வீரகத்தி, பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் ஆகியோரிடம் பயின்றவர். ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான வேர்களைத் தேடும் ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். 2005ஆம் ஆண்டுக்கான சம்பந்தர்விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சி. சிவலிங்கராசா
பிறப்புசிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா
16.12.1945
திருநெல்வேலி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுயாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர், ஈழத்து எழுத்தாளர்

எழுதிய நூல்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி - ஆசிரியர் எஸ். சிவலிங்கராஜா, சரஸ்வதி சிவலிங்கராஜா
  • ஈழத்துத் தமிழ் உரைமரபு - எஸ். சிவலிங்கராஜா
  • யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள்
  • வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
  • வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும்
  • யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு”, “19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி

வெளி இணைப்புகள்

பேராசிரியர் சிவலிங்கராஜா

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.