ஓத்து

ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது.[1]

நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது.[2] தவல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.

ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.

அடிக்குறிப்பு

  1. 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
    இன மொழி கிளந்த ஓத்தினானும்,
    பொது மொழி கிளந்த படலத்தானும்,
    மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
    ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
  2. நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
    பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
    நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
    ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
    எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
    என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
    விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)

  3. நன்னூல் காண்டிகை உரை
  4. மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள்)
  5. உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான (தொல்காப்பியம் 3-33)
  6. கூட்டுப்பொறியல்
  7. சிலப்பதிகாரம் 15-70
  8. தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும், ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று, (சிலப்பதிகாரம் 22-28)
  9. மணிமேகலை 13-25
  10. இன்னா நாற்பது 21
  11. இனியவை நாற்பது 7
  12. சிறுபஞ்சமூலம் 82
  13. சிறுபஞ்சமூலம் 61
  14. சிறுபஞ்சமூலம் 62
  15. ஓத்தான் வினை ஆம்; (சிறுபஞ்சமூலம் 72)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.