ஒய்சாள வினையாதித்யா

வினையாதித்யன் ( Hoysala Vinayaditya,1047-1098 ) என்பவன் ஒரு போசாள மன்னனாவான். இவனது காலத்தில் போசாள மன்னர்கள் சமணத்தை ஆதரித்தனர். இவன் தனதருகில் உள்ள சிற்றரசுகளை தன்வயப்படுத்தி நாட்டின் எல்லையை விரிவாக்கினான். மேலைக் கங்கர்களை சோழர்கள் வெற்றிகொண்டு கங்கப்பாடியைக் கைப்பற்றியபோது இவன் கங்கபாடியின் சில சிறிய பகுதிகளைத் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். இவன் சாளுக்கிய சோமேசுவரனுடன் திருமண உறவைப் பேணியவன். (சோமேசுவரனுக்கு இவன் மாமனாராவோ அல்லது மருமகனாகவோ இருந்தான்.)

குறிப்புகள்

  • Dr. Suryanath U. Kamat, A Concise History of Karnataka from Pre-historic Times to the Present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.