ஐசரி கணேஷ்

ஐசரி கே கணேஷ் (Ishari K Ganesh) சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார்.[1] 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையேற்ற அரசில் அமைச்சராகப் பணியாற்றிய தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.[2] தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார்.[3]

ஐசரி கே கணேஷ்
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஐசரி
பிறப்புசென்னை, இந்தியா
பணிவேந்தர் / தலைவர் , வேல்ஸ் பல்கலைக்கழகம்

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை கூட்டத்தின்போது உடனிருந்த அறக்கட்டளை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நவம்பர் 1, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

  1. "Rs.686 crore for conservation, protection of natural resources". தி இந்து (Dec 28, 2010). பார்த்த நாள் 2011-03-09.
  2. "Madras varsity VC opposes Foreign Universities Bill". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Mar 25, 2010). பார்த்த நாள் 2011-03-09.
  3. "3000 take health sciences CET". தி இந்து (Aug 29, 2005). பார்த்த நாள் 2011-03-09.
  4. வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் கைது தினமணி செய்தி

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.