எருசலேம் சிலுவை

எருசலேம் சிலுவை அல்லது சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை என்பது முன்னறிவிப்புச் சிலுவை அல்லது கிறித்தவ அடையாளம். இது நான்கு சிறிய கிரேக்க சிலுவைகளால் சூழப்பட்ட பெரியதொரு கிரேக்க சிலுவையைக் கொண்டதாகும்.[1]

சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை
சியார்சியா நாட்டுக்கொடி
எருசலேம் சிலுவை

முதலாவது சிலுவைப் போரின்போது இரண்டாம் ஏர்பன் எனும் திருத்தந்தையால் சிலுவைப் போர்வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதாகை பின்பு இலத்தீன் எருசலேம் பேரரசின் அடையாளமாக விளங்கியது. இது "சிலுவைப் போர்வீரர்களின் சிலுவை" என அழைக்கப்படும். இது அப்பேரரசின் முதலாவது தலைவராகவிருந்த கோட்பிரி என்பவரால் அணியப்பட்டது.[2] நான்கு சிறிய சிலுவைகளும் நான்கு நற்செய்தி நூல்கள் அல்லது எருசலேமிலிருந்து நாற் திசைக்கும் பரந்து சென்ற கிறிஸ்துவின் வார்த்தை என மாதிரியாகக் கொள்ளப்படுகின்றது. மாற்றீடாக, ஐந்து சிலுவைகளும் இயேசுவின் ஐந்து காயங்களையும் முதல் ஐந்து கிறிஸ்தவ சபைகளையும் அடையாளப்படுத்துவதாகவும் அர்த்தம் கொள்ளப்படும்.[3][4]

எருசலேம் சிலுவை சியார்சியா நாட்டுக்கொடியிலும், கத்தோலிக்க கய்ரோஸ் ஞான ஒடுக்கத்தின் பின்பு அணியும் பதக்கமாகவும், திருக்கல்லறைத் தேவாலய ஆணையிலும்,[5] கனடாவின் ஆளுனரின் சின்னத்திலும்[6] பாவிக்கப்படுகின்றது.

ஒருங்குறி குறியீடு

ஒருங்குறி குறியீடு பிற அடையாளங்களின் அட்டவணையில் , U+2629 (CROSS OF JERUSALEM) காணப்படுகின்றது. ஆயினும், அக்குறியீடு எருசலேம் சிலுவை அல்லாமல் கிரேக்க சிலுவை போன்று காணப்படுகின்றது.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.