எரவல்லன்

எரவல்லன் என்னும் பழங்குடியினர் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களை வில்லுவேடன் என்றும் அழைப்பர். இவர்களுடைய மொழி தமிழாக இருந்தாலும், மலையாளம் கலந்த கலப்பு மொழியையே பேசிவருகின்றனர். இவர்களுடைய தொழில் காட்டில் விலங்குகளை வேட்டையாடுதல், காட்டுத் தோட்டங்களில் பணிபுரிதல் மற்றும் காட்டில் உள்ள பொருட்களைச் சேகரித்தல் ஆகும்.

இவற்றையும் காண்க

எரவல்லன் மொழி

மேற்கோள்

  • மனோரமா இயர் புக் 2005.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.