கர்ணன் (ஒளிப்பதிவாளர்)

கர்ணன் ( ஒலிப்பு) (இறப்பு: டிசம்பர் 13, 2012) தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், சிவப்பு சூரியன் உட்படப் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பல சாகசக் காட்சிகளைத் திறம்பட படம் பிடித்தவராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீரினடியே எடுக்கப்பட்ட காட்சிகளும் இவரது மேற்கத்திய பாணி திரைப்படங்களில் குதிரைத் துரத்தல்களை படம் பிடித்த விதமும் பெரிதும் பேசப்பட்டன.

இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தமது 79வது அகவையில் திசம்பர் 13, 2012இல் மாரடைப்பால் காலமானார்.[1]

இயக்கிய திரைப்படங்கள் சில

மேற்கோள்கள்

  1. "ஒளிப்பதிவாளர் கர்ணன் மாரடைப்பால் மரணம்". திசம்பர் 13,2012. தினமலர். பார்த்த நாள் டிசம்பர் 14, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.