உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (ஆங்கிலம்: International Association of Tamil Research) என்பது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தும், தமிழ் ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1960களில் "அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு" தொடங்கப்பட்டது.[1]

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

விமர்சனங்கள்

தமிழ்நாட்டில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் இலாபங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றும், அரசியல் தலையீடுகள் மன்றத்தின் கல்விசார் சுதந்திரம் கேள்விக்குறியாக்கின்றது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
  2. தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.