உயிர்மை

உயிர்மை 2003 ஆகத்து மாதத்திலிருந்து மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு இலக்கிய மாத இதழாக வெளிவருகிறது. அரசியல், சமூகவியல், அறிவியல், சூழலியல், சினிமா, பழந்தமிழ் இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல் விமர்சனம் என்பனவற்றிற்கு முக்கியத்துவமளித்து வருகின்றது. நாடகம் தொடர்பிலும் உயிர்மை கவனம் செலுத்துகின்றது. நல்ல, வித்தியாசமான நிழற்படங்களுக்கும், உருக்களுக்கும் இவ்விதழ் இடமளிக்கிறது. உயிர்மை பதிப்பகம் மூலம் பெருமளவு தரமான நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.