உம்மன் சாண்டி

உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய சனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்[1]

உம்மன் சாண்டி
ഉമ്മന്‍ ചാണ്ടി
கேரள முதலமைச்சர்
முன்னவர் வி. எஸ். அச்சுதானந்தன்
தொகுதி புதுப்பள்ளி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 31, 1943 (1943-10-31)
புதுப்பள்ளி,  திருவிதாங்கூர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மரியம்மா உம்மன்
பிள்ளைகள் 1 மகனும் 2 மகள்களும்
இருப்பிடம் புதுப்பள்ளி, கேரளா
சமயம் கிறித்துவர்
இணையம் http://www.oommenchandy.net
As of நவ 2, 2007
Source: Govt. of Kerala

மேற்கோள்கள்

  1. தினமணி செய்தி

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.