உபமன்யு

உபமன்யு என்பவர் பிரம்ம ரிஷியான வியாக்ரபாதர் மற்றும் ஆத்ரேயி தம்பதியினரின் மகனும், அயோதௌம்யர் மகரிசியின் சீடரும் ஆவார். இவர் சிறு குழந்தையாக இருந்த பொழுது பசியின் காரணமாக அழுதார், அப்போது சிவபெருமானே பாற்கடலை இவருக்கு தந்தார். கிருஷ்ணனுக்கு குழந்தை வரம் கிடைக்க சிவபெருமானை வேண்டும் படி வழிகாட்டியவர் இவரே.

காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் என்ற சிவாலயத்தில் உபமன்யு வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள இறைவனிடம் தனக்கு அதிக பால் வேண்டும் என உபமன்யு வேண்டினார். அதனால் சிவபெருமான் பாற்கடலையே உபமன்யுவிற்கு அளித்தார். பசியாறிய உபமன்யுவிற்கு சிவபெருமான் ஞானமும், இளமையும் தந்தார். [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள் மேற்கோள்கள்

  • ஆதித்திய புராணம்
  1. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தான்தோன் றீச்சரப் படலம் | பக்கம்: 299 - 3௦3

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.