உண்ணாநிலைப் போராட்டம்
உண்ணாநிலைப் போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் (Hunger strike) என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
மகாத்மா காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலன்களுடன் பயன்படுத்தினார்.
1987 இல் திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படுத்தினாலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.
செப்டம்பர் 2007 இல் பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தார், எனினும் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்
- பொபி சாண்ட்ஸ், ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: மே 5, 1981
- திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர், இறப்பு: செப்டம்பர் 26, 1987
- அன்னை பூபதி, தமிழீழ ஆதரவாளர், இறப்பு: ஏப்ரல் 19, 1988